Friday, 30 August 2019

காந்தி பிறந்த பூமி-1.


காந்தி பிறந்த பூமி-2
----------------------------------
ஹே ராம்.ஹே ராம்.    
  --------------------------------------                   
தீர்ந்தது கடனென வெடித்தது இத்தாலியின் 
கைத்துப்பாக்கி மும்முறை
பிரார்த்தனைக்குக் கூடிய கூட்டத்தின் 
கண்முன்னே நடந்து வருகிற 
நாட்டின் தந்தை என்று போற்றுதல்  
பெற்ற மோகன்தாஸே , புவியின் மைந்தனே !
சுட்டான் கோட்ஸே,மடிந்து விழுமுன்
கூப்பிய கையில் ஒடுங்கிய பகைக்கு
புன்னகை ஒன்றைப் பரிசளித்து
முடிந்தது பணியென ஒடுங்கியது 
ஓர் பேருயிர். வரலாற்றின் பக்கம் 
ஒன்று மூடியது.கன்னம் ஒன்றில் 
அறை விழுந்தால் திருப்பிக்காட்டிடு   
மறு கன்னத்தைக் காட்டென்று இயேசு 
சொன்னதை நிலைநாட்டிக்காட்டி 
மடிந்தான் ஒரு மானுடன்   
நாதுராம் நாதுராமென உலகமுழுவதும் 
கொலையாளியின் பெயர் சொல்லி அலறிட 
பாதகம் அறியாத போர்பந்தரின் புதல்வன்
மடிந்தான் பிரார்த்தனையின் வெகுமதி 
பெற்று, என்னைப் பெற்ற கடன் தீர்ந்ததென 
சூரியன் வராத வானம் பார்த்து
இறைவன் விரதம்  நீட்டிக்கச் செய்தானானென
உண்ணாதிருந்த புத்லிபாயின்
நினைவோடு ஹே ராம் என்று 
மண்ணின் மைந்தன் சாய்ந்தது கண்டு
மறைந்தது சூரியன் வானுக்குள் [தொடரும்]    

No comments:

Post a Comment