காந்தி பிறந்த பூமி
இல்லை இல்லை குறைகள் காணா மனிதர்கள்;
நிறைகளை மறுக்கும் மனிதர்கள்
பிறப்பதற்கில்லை நிச்சயம் இனிமேல்
க்ளோனிங் கூடத் தோல்வியுறும்
குறையும் நிறையும் அலை
நுரையாகி
அழிந்து கடந்து ஆவியாகும்
தாய்ப்பால் கீதையை அருந்தினாய் ;
மாற்றம் கண்டாய் அன்றாடம்;
வாய்மை வாசகம் மலைப்பிரசங்கம்
,அச்சம் வெல்ல தாதி சொன்ன
எதிரிகள் ..எதிரிகள் என எச்சரித்தபடி
நாடு பிடிக்க நாற்காலிக்காகப் பகைமை
நஞ்சில் தோய்ந்த நெஞ்சுகள் மத்தியில் .நாடு பிடிக்க நாற்காலிக்காகப் பகைமை
தாய்ப்பால் கீதையை அருந்தினாய் ;
மாற்றம் கண்டாய் அன்றாடம்;
வாய்மை வாசகம் மலைப்பிரசங்கம்
,அச்சம் வெல்ல தாதி சொன்ன
ராம் ராமென்ற ஒற்றை மந்திரம்
போதாதோ மானுட மனமெனும்
தொடுவான்
நோக்கி வழி காட்டி மின்னும் விடிவெள்ளி
வாசித்து வாசித்து
வெளிச்சம் கண்டாய்
வாசிக்க வைத்தாய், நேசிக்கச் செய்தாய் ;
வெறுப்போருக்கும்
கற்பித்தாய் மோகனதாஸ்
எங்கள் குருதட்சிணை
மூன்றே மூன்றே குண்டுகள்!
மூன்றே மூன்றே குண்டுகள்!
இருளே நிலையென வரலாறில்லை.
காத்திருப்பது;கடமைசெய்வது
இவையே கட்டுமரத்துத்
துடுப்புகள்
கடலின் நிலைமை கர்மயோகம்
அலைவீச்சில் ஒரு கதிர்வீச்சை
காட்டித்தந்தாய், சுட்டுத்தீர்த்தோம்
உன் சாம்பலின் மீது காந்தி ஜபம்
நடந்து காட்டினாய் போதும்,தொடர்வோம்
கடலின் நிலைமை கர்மயோகம்
அலைவீச்சில் ஒரு கதிர்வீச்சை
காட்டித்தந்தாய், சுட்டுத்தீர்த்தோம்
உன் சாம்பலின் மீது காந்தி ஜபம்
நடந்து காட்டினாய் போதும்,தொடர்வோம்
No comments:
Post a Comment